மராமரம்

தூண்சிற்பம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் மராமரமப் படலம் வள்ளல் இந்திரன் மைந்தற்கும், தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர; பொருள்: (பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை. வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை: கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம் Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the e...