Posts

Showing posts from October, 2012

ஷோக்குக்குத் தான்யா மதிப்பு

வாதாம் பலகலை கற்றுவந் தாலுமிவ் வையகத்தில் ஏதாம் புனைநலம் இல்லான் எழில்? நல் லிடமுந்தந்து பீதாம் பரற்கொரு பெண்தந்த பாற்கடல் பின்புவந்த வேதாந்த வித்தெனும் வானாம் பரற்கு விடந்தந்ததே விளக்கம்: ஒன்றோடொன்று மாறும்படியான பல கலைகளை கற்று வந்தாலும் (கற்று உவந்தாலும்) இவ்வுலகத்தில் ஆடையணிகளால் நிறைந்து விளங்கும் தோற்றம் இல்லாதவற்கு அமைந்த அழகால் என்ன பயனாம்? பீதாம்பரத்தை தரித்து வந்த திருமாலுக்கு பாயல் கொள்ள நல்லதோர் இடத்தோடு திருமகளையும் தந்த பாற்கடலானது , பின்பு (பாம்பணிந்து, புலியதளாடை தரித்து வந்த) வேதாந்தத்திற்கு முதல்வன் என்னும், வானத்தை ஆடையாகத் தரித்த சிவபெருமானுக்கு விஷத்தை அல்லவோ தந்தது! - தனிப்பாடற்றிரட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம்