சிவராத்திரி 2022



வண்டிலங்கு குழல் 
கெண்டையொத்த விழி 
பெண்டமைந்த விடம்          மருள்தீர

பண்டிலங்கை பதி 
வண்டிடப்பு யமும் 
தண்டிருப்ப தியில்                   பழுதாக 

 

அண்டமுய்ய விடம் 

உண்டமர்ந்த கறை 

கண்டவுந்த னரு                       ளெமைசேர


 

உண்டெமெக்கு பகை 

எண்டுரைப்ப ரிலை 

எண்டிசைக் கரியுங்                    கரியாமே

 

 

வகை: எழுசீர் விருத்தம்


 




 

பதம் பிரித்து:

 

வண்டு இலங்கு குழல் 
கெண்டை ஒத்த விழி 
பெண்டு அமைந்த இடம்                 மருள்தீர

பண்டு இலங்கை பதி 
வண் திடப் புயமும் 
தண் திருப்ப தியில்                           பழுது ஆக 

 

அண்டம் உய்ய விடம் 

உண்டு அமர்ந்த கறை 

கண்ட! உந்தன் அருள்                       எமை சேர


 

உண்டு எமக்குப் பகை 

எண்டு உரைப்பர் இ(ல்)லை 

எண் திசைக் கரியும்                           கரியாமே

 

 



பொருள்

  1. வண்டு மொய்க்கும் (பூங்)குழலும்கெண்டை மீனைப் போன்ற விழியும் உள்ள பெண் அமைந்த இடப்பாகம், அடைந்த மருட்சியைக் நீக்குமாறு (அம்மருட்சிக்குக் காரணமான) 
  2. பண்டு (முன்பொருநாள் (அல்லது) பழமை வாய்ந்த) இலங்கையின் பதியான (அரசனான) இராவணனின் அழகிய வலிமையான தோள்களைச் சோர்வு எய்தும்படி, தண்மையான (குளிர்ச்சியான) திருவிடத்தில் (கைலாயத்தில்), செய்தவன்
  3. ஆலகால விஷத்தால் இந்த அண்டம் அழியாமல் இருப்பதற்காகஅதை உண்டு (நிலையாக) அமர்ந்து, (அதனால்) நீலக்கறை கொண்ட மிடற்றோனே (கறைகண்ட!), உனது அருள் சேர்ந்தால்.
  4.  உண்டு எமக்கு பகை” என்று உரைப்பவர் இல்லைஇதற்கு எட்டுத்திக்குகளைத் தாங்கும் யானைகளும் (கரியும்) சாட்சியாமே (கரியாமே)

 

 


தொடர்புள்ள பழைய இடுகைகள்:


  1. சிவராத்திரி 2020
  2. சிவராத்திரி 2019



Comments

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director