திருபுராந்தகன்

இம்முறை சிவராத்திரிக்கு, திருபுராந்தக புராணம் பற்றி ஒரு சின்னஞ்சிறு பாடல்:






அரக்கர் மூவரின் அயில்தாக்கிட புரந்தரன் தலை பல தேவரும்
                             வருந்த ஈசனும் செறுஏகினான் வருந்த ஈசனும் செறுஏகினான்

பரந்த வையகம் ரதமாகிட பரிதி சந்திரன் உருளாகிட
                              அரிய நான்மறை பரியாகிட பிரம சாரதி வழிகாட்டினான்

கிரிவ ளைந்தொரு சிலையாகிட பெரிய வாசுகி சிலைநாணிட
                                        கரிய மாலவன் கணையாகிட சுரர னைவரும் தமராலுரு

பெருமை எண்ணிட நுதல்நேத்திரன் முறுவலித்திட எரிதாக்கிட
                               திருபு ரங்களும் பழுதாகிட விரிச டையொடு நடமாடினான்


பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

Last year's post: http://dagalti.blogspot.com/2019/03/blog-post.html

Comments