கம்பன் கவிச்சக்கரவர்த்தியா?


சந்த ஒலியில் கட்டுக்குள்ளேயே உழன்றுகொண்டு, மிகையான உவமைகளை மீண்டும் மீண்டும் கையாண்டு, புளித்துப்போகும் அளவிற்கு பெண்ணுடல் பற்றிய வருணணைகளை எழுதியவர் தான் கம்பர், என்பதை மறுக்கமுடியாது. பக்திரசம் என்பதிலாவது அவர் முன் நிற்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு சில நூறு ஆண்டுகள் முன்னர் எழுதிய ஆழ்வார்களின் பாசுரங்களோடு ஒப்பிட்டால் கம்பர் எழுதியவை வெற்றுக்கூவல்கள் என்றே தோன்றுகின்றன. மேலும் சோழர்கள் படைபலம், போர்த்திறம் ஆகியவற்றை மறைமுகமாக மெச்சும் வகையில் யுத்த பகுதிகளை அளவுக்கு அதிகமாக நீட்டி காவியத்தின் சமன்நிலை இலக்கணங்களை முற்றிலும் குலைத்தார் கம்பர்.

மத, அரசியல் காரணங்களுக்காக மேலெழுந்த ஒரு வரலாற்று அசந்தர்ப்பமாக அவரைப் பார்ப்பதே சரி. அவர் சமகாலத்து ஒட்டக்கூத்தரின் கலிங்கத்துப்பரணி, மூவர் உலா போன்றவை கம்பன் கவிதைகளைக் காட்டிலும் சுவைமிக்கவை. அவற்றுக்கு சரியான இடம் இன்றுவரை தமிழில் கிடைக்கப்பெறாமல் இருப்பது ஏன் என்று எண்ணவேண்டும். அந்த காலகட்டத்தில், வைணவ மதம் அடுத்த கட்டத்தைச் சென்றடைய, வடமொழியின் முக்கியமான காப்பியம் தமிழில் ஓரளவு நயம்பட வந்தடைய சீரிய முயற்சி எடுத்தவர் கம்பர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர் நம்மாழ்வாரை அடுத்த தளத்துக்கு நகர்த்தியவர் அல்லர். அதற்கான அறிவு உழைப்பு அவரிடம் இல்லை. சடகோபர் அந்தாதியுடன் அவர் எல்லை தெளிவாகிறது. 

வெகுமக்களின் உணர்ச்சிகளை அறுவடை செய்து, அதன் மூலம் தன் தரப்பின் அடித்தளத்தை வலுவாக்க தன் கவித்திறத்தை திறம்பட பயன்படுத்தியவர். அவ்வளவே. 

கம்பனைப் படிக்கும்போது சொற்களும், உருவகங்களும் மேலே வந்து வந்து மோதுகின்றன. கபிலர் போன்ற சிறந்த கவிஞர்கள் தீட்டிச்செல்லும் அழகனான சொல்லோவியங்கள் இல்லை அவை. சிக்கனம், சுருங்கக்கூறல், வாசகனின் யூகத்திற்கும் கற்பனைக்கும் இடம் அளித்தல் போன்றவை எல்லாம் கம்பனிடம் கிடையவே கிடையாது. அவ்வழிகள் அவர் அறிந்திருக்கவில்லை என்றும் சொல்லல் ஆகாது. இளங்கோவடிகளிடமிருந்தும், சிந்தாமணி எழுதிய திருத்தக்கத் தேவரிடம் இருந்தும், வள்ளுவரிடமிருந்தும் அவர் பல சித்திரங்களை எடுத்துக் கையாண்டார் என்பது தெளிவு. ஆனால் அவற்றிலுள்ள 'அடக்கம்' இல்லாமல் ஒரு வித 'அலறலுடன்' தான் கம்பனில் அவை காணக் கிடைக்கின்றன. அவர்கள் அவதானித்த கணங்களின் மென்மை, அடக்கமான தொனியில் அவர்கள் வரிகள் ஏற்படுத்திய தாக்கம், அவர்கள் கவிதைகளில் தொடந்து வரும்: வாழ்க்கையில் பல்பரிமாணத்தன்மை, புரிதலுக்கடங்காமை போன்றவை கம்பருக்கு கடைசி வரை கைகூடவே இல்லை. 

 இயற்கையுடன் மனிதர்களுக்கு இருக்கும் உறவு சங்க இலக்கியங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கம்பனில் ஒரு வித கீழ்நோக்குப் பார்வையுடன் இருக்கிறது. மனிதனின், அதுவும் காவிய நாயகனின், தேவைக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும் பொருட்களின் தொகையாகத் தான் இயற்கையைப் பார்க்க முடிகிறது கம்பர் பாடல்களில். 

 தமிழ் பாரம்பரியத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் இடம் மிகை என்பது உறுதி. அதை உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்தால் எளிதில் உணரலாம். ஆனால், நம்மவர்கள் தங்கள் அடையாளத்துடன் கம்பனை இணைத்துக்கொண்டுவிட்டார்கள், பல வருடங்களாக பட்டிமன்றங்கள் என்று கூவி வருகிறார்கள், மேலோட்டமாக சில பாடல்களைப் படித்து சிலாகித்துக் கொள்கிறார்கள்- அவற்றில் எத்தனை வான்மீகத்தில் இருப்பவை/புதியவை என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

இந்திய அளவில் பார்த்தால், கம்பரின் காலத்தில் எழுதிய காளிதாஸர் தொட்ட உச்சங்களை கம்பர் எட்டவில்லை என்றே சொல்லவேண்டும். குமாரஸம்பவம், மேகசந்தேசம் ஆகியவற்றில் மொழி கையாளப்பட்ட விதம் பற்றி டி.டி.கொஸாம்பி விரிவாக ஆராய்கிறார். கம்பரிடம் அத்தகைய நுணுக்கங்களுக்கு இடமே இல்லை. மொத்தமான மட்டையடி தான். எளிதில் உணர்ச்சிவயப்படும் மனங்களுக்கு ஏற்ற கவிஞராக அவரைப் பார்க்கலாம். 

எதையும் படிக்காமல் நமக்கு நாமே பட்டம் கொடுத்துக்கொண்டு மார்தட்டிக்கொள்ளும் அசிங்கமான பழக்கம் தமிழர்களுக்கு மட்டுமே. அதனால் தான் நுட்பமான தத்துவ தரிசனங்களை அளிக்க முடிந்த இத்தாலிய கவிஞர் தாந்தே, பெயருக்கு முன்னொட்டுகள் இல்லாமல் இருக்கும்பொழுது, கம்பனுக்கு 'கவிச் சக்கிரவர்த்தி' என்று பட்டம் தருகிறோம். 

 அவையடக்கத்துடன் "மூங்கையான் பேசலுற்றான் என்ன நான் மொழியலுற்றேன்" என்று கம்பர் தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார். காளிதாசர், கபிலர், தாந்தே போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த வரி உண்மைதான் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

 பி.கு. பாரதிக்கு கட்டஞ் சரியில்லை. அடுத்து கம்பரா இருக்கலாம்னு நானே எழுதிப் பாத்துக்கறேன். Parodyம்பாய்ங்களே

Comments

  1. ஆஹா சரியான போட்டி. ஜெமோ போகிற வேகத்தை பார்த்தல் அவர் தன்னையே ஏதோ ஒரு காலத்தில் நிராகிப்பார் என்று தோன்றுகிறது. அப்பொழுது அவர், "டகல்டியிடம் இருந்த எகத்தாளமும், நுண்ணிய அறிவும், ஆழ்ந்த கலையுணர்வும், பரந்த வாசிப்பின் பின்புலனும் ஜெமோவிடம் இல்லை என்றே சொள்ளவேடும். அதனால் தான் ஜெமோவின் நய்யாண்டி படைப்புகள் மனித மன ஆழத்தை ஆராயாமல் மேலோட்டமாகவே வெகுஜன ரசனையுடன் நின்றுவிடுகின்றன. டகால்டி போன்றவர்களை படித்த பிறகும் ஜெமோவை நாம் நிராகிக்கவில்லை என்றால் அது இன்றைய தமிழ் சூழலின் அவலத்தை தான் காட்டுகிறது." இப்படி ஒரு பதிவு ஜெமோ எழுதினாலும் நாம் ஆச்சரியப்படவேண்டாம்.

    ஆனால் என்னை பொறுத்த வரையில் சுஜாதாவை பற்றியும், பாரதியை பற்றியும் ஜெமோவின் விமர்சனம் சரியானதே என்று படுகிறது. என்னளவில் நான் இதே கருத்துதான் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். பாரதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் பாஞ்சாலி சபதம் அருமையாக இருக்கும். ஆனால் பல கவிதைகள் என்னை பாதித்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. Such parody is possible only when one is literally suffused with Kamban. Top stuff. Cerebral riposte to, what I feel, a devious dissertation elsewhere. Keep it coming.

    ReplyDelete
  3. LOl@Suresh

    I am not trying to compete. JM is unbelievably well read and has a more well rounded opinion that I can hope to have.

    If his point is Bharathi is way behind Kamban, Kabilar etc. then fair enough. But Bharathi is still the guy to beat. Of course nearly all his poems are direct and pulsating with a singular emotion. If you are going to discount that attitude itself, then it is difficult to call him a great.

    Standing beyond time is not a problem at all.

    உணவு இயற்கை கொடுக்கும்/
    உமக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

    Bharathi sings in one place. The second line is straight and didactic. But just look at the depth in the first line. Doesn't it exactly identify what stands in the way of universal love? That we all have to expend energies to look after ourselves and our interests? How many poets have had the insight to see this juxtaposition?

    Btw JM rejecting himself is not going to happen in a zillion years :-)

    KBalakumar, Thank You. I don't offer it as a counterargument. I don't think I have the werewhithal of interest for that. I am curious to know who would deserve the Mahakavi tag if BHarathi would not. And if it is tags we are resisting, someone could make a case for decrying Kamban too!

    ReplyDelete
  4. "If his point is Bharathi is way behind Kamban, Kabilar etc. then fair enough. But Bharathi is still the guy to beat."

    Fully agree on this. I think if we look at the 'Mahakavi' tag within the Tamizh literary circle, then I don't see a problem. BTW, Ka.Na.Su had almost completely rejected Tagore as a poet. He said exactly what JeMo says about Bharathi's thoughts. They were not original but derivative. Ka.Na.Su ofcourse had great respect for Tagore as a short story writer.

    ReplyDelete
  5. ஜெமோ any publicity is good publicity ம்பாங்களே அத follow பன்றாரோன்னு சில சமயம் தோணுது

    ReplyDelete
  6. It's so well written that it's authentic. :-D பாரதியார் எழுத்தாளனா லட்சணமா தன் காலத்து வாழ்க்கையைப் பதிவுசெய்யாம பக்தி, தேசிய, காதல் பாடல்கள் எழுதிட்டிருந்ததா ஒரு விமர்சனம் இருக்கே... ஆனா இலங்கைல மகாகவின்னே ஒருத்தர் இருந்திருக்காரு.

    சுரேஷ்: சுய நிராகரிப்பா? நீங்க பாயின்ட்டை புரிஞ்சிக்கலியா, அல்லது அப்படி காட்டிக்கிறீங்களா? :-)

    ReplyDelete
  7. //பாரதியார் எழுத்தாளனா லட்சணமா தன் காலத்து வாழ்க்கையைப் பதிவுசெய்யாம பக்தி, தேசிய, காதல் பாடல்கள் எழுதிட்டிருந்ததா ஒரு விமர்சனம் இருக்கே//

    இதுக்கே காலம் கடந்து நிக்கலைன்றாங்க, நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க.

    //இலங்கைல மகாகவின்னே ஒருத்தர் இருந்திருக்காரு//
    கேள்விப்பட்டிருக்கேன். பேரே அப்படி வச்சிக்கிட்டது நல்ல சமயோசிதம்.

    ReplyDelete
  8. dagalti - 'கம்பன் விவாதங்கள் - பகுதி I' என்ற தலைப்பில், அடுத்த வருடம் பதிவிட ஜெமோ வைத்திருந்த கட்டுரையை, இப்படி அபகரித்து முன்னமே பதிவிடுவதுதான் தமிழ் அறமா?

    நல்ல வேளை, Shakespeare பற்றிய பதிவு உங்கள் கைக்குக் கிடைக்கவில்லை: Tolstoy நிராகரித்த ஒருவனை மகாகவிஞன் என்று உலகம் கொண்டாடுவது என்ன கொடுமை? அவராக சுயமாக ஒரு இதிகாசமேனும் படைத்திருக்கிறாரா? அவருக்கு முன்பிருந்த கிரேக்க, ரோமானிய,ஐரோப்பிய நாட்டார் மரபினைப் படித்தறியாதவர்கள்தான் அவருக்கு அந்தப்பட்டத்தை வழங்கமுடியும். (விஷ்ணுபுரம் மாதிரி) ஒரிஜினல் இதிகாசம் எழுதியவர்கள் மட்டுமே அந்த இடத்திற்கு வரத்தகுதி படைத்தவர்கள்.

    ReplyDelete
  9. சாத்தான்: ஜெமோ எங்கு செல்கிறார் என்று தெளிவாக புரிகிறது. ஏதோ என்னால் முடிந்த பகடியை செய்தேன்.

    டகால்டி: பாரதி காலத்தை கடந்து நிற்பான் என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  10. இந்த கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்னு சொல்றாங்களே அதெல்லாம் யாரோ சும்மா டகால்டிக்கு சொல்லிட்டுப் போனதோ? :-)

    ReplyDelete
  11. நல்ல அங்கதம் .

    ReplyDelete
  12. நான் அடுத்து ஜெயகாந்தன் என்றுதான் நினைத்தேன்...அவரைப்பற்றி ஜெ.மோ. ஏற்கனவே நல்லவிதமாக எழுதி விட்டார்...இனி குறை சொல்லவேண்டியதுதான் பாக்கி...ஒரு அம்பது பக்கம் இப்பவே தயாராகி விட்டிருக்கும் (தலைக்குள் தான்)

    ReplyDelete
  13. அருமையான பகடி

    ஜெ நிரம்பப் படித்தவர். அநதத் தைரியத்தில்(திமிரில்!?) தான் இப்படியெல்லாம் எழுதுகிறார். ஆனால் அவரோடு உண்மையான விவாதத்தை இன்னும் யாரும் எடுக்க முன்வரவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  14. நன்றி @Arangasamy

    Anon - நன்றி.
    விவாதத்தை முன்னெடுக்க திராணியுள்ளவர்கள் எழுதலாமே. அதற்கெதும் தடையில்லையே.

    அதற்குத் தேவையான பரவலான வாசிப்பு என்னிடம் இருப்பதாக நான் எண்ணவில்லை.

    நான் வாசித்தவரை இது ஒரு நல்ல பதில் கட்டுரை.

    ReplyDelete
  15. Hey:

    I have not read your article carefully so I don't have detailed comments. But when you attempt a serious piece like this, you should try to get your facts straight. Kalingathu Bharani was written by Jeyangontaar, not Ottakkoothar.

    Best,
    Ravi

    ReplyDelete
  16. //But when you attempt a serious piece like this//
    Ravi, seriousness is last thing I was going for. Looks like I have flopped big time!

    ReplyDelete
  17. ஏன் ஹிட்ஸ்- ஸுக்காக இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்?

    ReplyDelete
  18. //இந்திய அளவில் பார்த்தால், கம்பரின் காலத்தில் எழுதிய காளிதாஸர் தொட்ட உச்சங்களை கம்பர் எட்டவில்லை என்றே சொல்லவேண்டும். //அது ரெண்டையும் நீங்கள் கரைத்துக் குடித்தவர்
    போல பேசுகிறீர்களே?

    ReplyDelete
  19. வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை
    தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
    கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்
    மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன்.

    இதில் என்ன குறை கண்டீர் அய்யா?

    ReplyDelete
  20. சமுத்ரா, அமைதி அமைதி. இது ஒரு parodyன்னு postலயே கடைசி வரில சொல்லிருக்கேனே.

    //கரைத்துக் குடித்தவர் போல பேசுகிறீர்களே?// இந்தப் போன்மையை எய்துவது மட்டுமே குறிக்கோள்.

    ReplyDelete
  21. டகால்டி,
    இந்த பதிவின் பின்னணி அறியாதவர்கள் இதை சீரியஸாக தான் எடுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. நீங்கள் பதிவின் இறுதியில் சொன்னவற்றை முதலில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்!
    ஜெயமோகனே மெச்சிய பதிவாயிற்றே இது! வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director