திருவல்லிக்கேணி

 எழுசீர் விருத்தம்

சந்தம்: தனாதன தனாதன தனாதன தனாதன  தனாதன தனாதனத் ...... தனதான

 

திருவல்லிக்கேணி

 

கராகது வயானையி நிராதர வுதீரசு டராழியெ றிதூயவன் புவிமீட்ட

வராகன துமாற்றல னிமூத்தன துகூற்றைக விராசனி வனாற்றல தனைக்காண                  

மராமர மொரேழுபு குவாளிவி டுராமனொ டுபார்த்தன துசாரதி யயுமாதி    

அராவணை யிலாணழ கநீள்வடி வுமேவுப தியேதவ னிமீதினில் இதுபோல   

 

பதம் பிரித்து

 

கரா கதுவ யானையின் நிராதரவு தீர  சுடராழி எறி தூயவன்   புவிமீட்ட

வராகனது மாற்றலனின் மூத்தனது கூற்றை கவிராஜன் இவன் ஆற்றல் அதனைக்காண

மராமரம் ஒரு ஏழு புகு வாளி விடு ராமனொடு பார்த்தனது சாரதியையும்ஆதி

அராவணையில் ஆணழகன் நீள் வடிவு மேவுபதி ஏது அவனிமீதினில் இது போல

 

 

கஜேந்திர வரதர்  நரஸிம்ஹர் ஶ்ரீராமர் பார்த்தஸாரதி ரங்கநாதர்


விளக்கம்

கரா கதுவ யானையின் நிராதரவு தீர  சுடராழி எறி தூயவன் 


கரா: முதலை

முதலை (காலைக்) கவ்வ (துயருற்ற) யானையின் ஆதரவற்ற நிலை தீரும் வகை சுடரொளி வீசிய தூயவனான வரதனை


 புவிமீட்ட

வராகனது மாற்றலனின் மூத்தனது கூற்றை


பூமாதேவியை மீட்டெடுத்த வராஹனது எதிரியான ஹிரண்யாக்ஷனின் மூத்த ஸஹோதரனான ஹிரண்யகஷிபுவுக்கு எமனான ந்ருஸிம்ஹனை


கவிராஜன் இவன் ஆற்றல் அதனைக்காண

மராமரம் ஒரு ஏழு புகு வாளி விடு ராமனொடு 


கவிராசன் = கபி ராஜன் = குரங்குகளின் அரசன் 


வானர அரசனான சுக்கிரீவன், இவனதை ஆற்றலினைக் காணும்பொருட்டு ஏழு மராமரங்களியும் ஒரே அம்பால் துளைத்த ராமனிபிரானையும்


பார்த்தனது சாரதியையும்


பார்த்தனுடைய (அர்ஜுனன்)  தேர்ப்பாகனான க்ருஷ்ணனையும்


ஆதி

அராவணையில் ஆணழகன் நீள் வடிவு


ஆதி சேஷனின் மீது கிடக்கும் ஆண் அழகனான (அரங்கநாதனின்)  நீண்ட வடிவழகையும்



மேவுபதி ஏது அவனிமீதினில் இது போல


(ஒரு சேர காணக்கிடைக்கும்) மேன்மையான ஸ்தலம் ஏது இந்த பூமிதனின் இந்த திவ்யக்ஷேத்திரத்தைப் போல?



ட்விட்டரில் எழுதியதை வருங்கால சந்ததியர் படித்தின்முரும்பொருட்டு இவ்வண்ணம் archive செய்தது.


Comments

  1. Just 🙏
    "அதெல்லாம் அப்டியே வர்றது தான் ல!"
    And please correct me if I'm wrong - is it not அரவணை instead of அராவணை?

    ReplyDelete
    Replies
    1. Thank you.

      அரவாவணை is நீட்டல் விகாரம்.

      Tamil prosody allows so much flexibility to enable you to hit the metre.

      For instance ஆணழகன் நீள்வடிவு would actually make it கன்நீள்வடிவு which would become

      நேர்நேர்நிரைநேர்

      தேமாநறும்பூ

      But you are allowed to ignore the ஒற்று ன், especially so when the next letter is ந வரிசை

      So it is க(ன்)நீவடிவு --> கநீ/வடி/வு

      கருவிளங்காய்

      So you can achieve the சந்தம் தனாதனன

      காதே கவிக்குத் தலை :-)

      Delete
  2. Ah, I"d've never known. Thank you, saar! Awaiting "39" :)

    ReplyDelete
  3. அதென்ன ஆனந்த பைரவி ராகமா? நீங்க பாடியது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director