'தெல்லாம் அப்டியே வர்ரத்தான்'ல?


பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து,
எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய,
நல் இயல், நவை அறு, கவிஞர் நா வரும்
சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான்
ராமன் வில் ஏந்தும் அழகை சொல்றார்.

உலகத்தில் உள்ள பலவகை மொழிகளில் நன்றாக அமைந்த
எல்லையில்லாத கடல் போன்ற நூல்களை நன்கு கற்ற,
சிறந்த, குற்றமற்ற, கவிஞர்களின் நாவிலிருந்து வரும்
சொற்கள் போன்ற குறைவு இல்லாத (தீரவே தீராத) அம்பராத் தூணியை ஏந்தினான்.

உவமானம் உவமேயம் எப்படி மாத்திப் போட்டிருக்கார் பாருங்க!

It's bountiful
Like
a Poet's tongue
His Quiver

Comments

  1. கம்பன் பெட்டி பெரிய பெட்டி! அதிலோ பலப் பல தங்கக் கட்டி!
    நடுநடுவே மின்னும் மரகதங்கள்! அதை எப்படி அம்புட்டுச் சரியாத் தேர்ந்தெடுத்து போடுறீக டகால்ட்டி?:)

    என்னவொரு Reverse Simile! மாற்றுரை உவமை!
    அம்புறாத் தூணிக்கு, கவிஞன் நாக்கைச் சொல்லணும்-ன்னா...அந்தக் கவிஞனே அப்படிப்பட்ட நாக்கை உடையவனாத் தானே இருக்கணும்? சரி தானே நான் சொல்லுறது?:)

    ReplyDelete
  2. ரொம்ப சிக்கனமா விளக்கத்தை முடிச்சிட்டீங்களே?:)
    இதுல இன்னும் நிறைய தூவி இருக்காரே நம்ம கம்பரு!

    நூற் கடல்
    நவை அறு
    இதெல்லாம் என்ன?
    அதென்ன "தொலைவு" இலாத் தூணி?

    தூணி தூக்கினான்!
    ஏன், அம்புறாத் தூணி ஏந்தினான்-ன்னு சொல்லலாமே! அதென்ன தூக்கினான்?

    இன்னிக்கி கல்லூரி மாணவ-மாணவிகள் எப்படி Books "தூக்கிட்டு" போறாங்க?=Backpack ல்ல! Styleஆ!:)
    அது போல இராகவன் அம்பு Backpack = தூணி தூக்கினான்:)

    ஒரு பொருளைத் "தூக்குதல்"-ன்னா, அந்தப் பொருள் கனமாகவோ, உயரமாகவோ, மதிப்பு மிக்கதாகவோ இருக்கும்!
    கீழே உள்ள தட்டை, டம்ப்ளரை = "எடுப்போம்"!
    கீழே உள்ள குழந்தையை = "தூக்குவோம்"!

    இப்படி மதிப்பு மிக்கதான அம்புகள் நிறைந்த தூணி!
    நாகக் கணை, வருணக் கணை, ஈசன் கணை-ன்னு பல மதிப்பு மிக்க கணைகளைத் தேர்ந்தெடுத்து வச்சிருக்கும் ஒரு வீரன்! அதனால் அதைத் "தூக்கினான்"!
    தூணியை வெறுமனே முதுகில் கட்டிக் கொள்ளாமல், உயரத் "தூக்கினான்"!

    உயரத் தூக்குவதால், அந்த அம்புகளின் மேல்பாகங்கள் எல்லாருக்கும் நல்லாத் தெரியுது! கம்பருக்கும் தெரிகிறது! கவிதை தொடங்குகிறது!
    -----

    கவிஞர் நா வரும் சொல் = எப்படி இருக்கும்?
    அம்பு போல எல்லாரையும் சுருக் சுருக்-ன்னு குத்தும்-ன்னா சொல்றாரு கம்பர்?
    கவிஞர்கள் அப்படிக் குத்துறவங்களா? இல்லை!

    கவிஞர் நா வரும் சொல் = அறச் சொல்!
    அதான் 'நவை அறு'-ன்னு சொல்லிட்டாரு! நவை = குற்றங் குறை!

    நன்னெறி ஒழுகச்செய்து "நவை"யறு காட்சிநல்கும்
    பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி-ன்னு முருகனைப் பாடும் கந்தபுராணம்!

    நவை அறு சொல், நல் இயல் சொல்!
    அப்பறம், அது எப்படி "கூரான" அம்பு ஆகும்?

    ReplyDelete
  3. * கவிஞர்கள் காதலைப் பாடும் போது = மலர் அம்பு! குத்தும்! ஆனால் குத்தி இன்பம் குடுக்கும்:)
    * கவிஞர்கள் வீரத்தைப் பாடும் போது = வில் அம்பு! பகையை அழித்து, தேசம் காக்கும்!
    * கவிஞர்கள் சமூகத்தைப் பாடும் போது = அங்குச அம்பு! குத்தி நெறிப்படுத்தும்

    இப்படி...கவிஞர்கள் அம்பு அனைத்தையும் செய்யும்!

    இத்தனை அம்புகளையும் கவிஞர்கள் எங்கே வச்சிருக்காங்க?
    = வீட்டுலயா? உலைக் களத்துலயா? இல்லை!

    அதெல்லாம் அற நூல்களைப் படித்து, தேர்ச்சி பெற்று, முன்பே தயார் செய்து, ரெடியா வச்சிருக்காங்க! எங்கே? = நாக்கிலே!

    அப்போ நாக்கு தானே = அம்புறாத் தூணி? அதான் கம்பர் அப்படி யோசிச்சிட்டாரு:)

    இப்போ பாட்டை இன்னொருகா பாருங்க...
    ----

    * பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து = பல மொழிகளில் முன்பே கடினப்பட்டு தேர்ந்து
    * எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய = பல அற நூல்களை ஏற நோக்கி

    இங்கே, "ஏற நோக்கி"...ரொம்ப முக்கியம்!
    ஏற நோக்கி = உசர நோக்கி!
    ஏறெடுத்துப் பார் = ஏற! மேல் நோக்கிப் பார்!
    ஏறக் கட்டு-ன்னு சொல்றோம்-ல்ல! அதே தான்! எல்லாத்தையும் கட்டிப் பரண் மேல வைத்தல்!

    கவிஞர்கள், என்ன தான் ஆயிரம் புத்தகம் வாசிச்சாலும், அதெல்லாம் ஏற நோக்குவாங்களாம்! No Bias!
    தங்கள் மனசுக்குப் புடிச்சா மாதிரி படிக்காம, மூல நூலில் உள்ளது உள்ளபடி படிப்பாங்களாம்!

    கீழே இருக்கவனுக்குத் தான் மேடு பள்ளம்! விமானத்தில் பறக்கறவனுக்கு எல்லாம் ஒரே சீராத் தானே தெரியும்? அதான் "மேல இருந்து" படித்தல் = ஏற நோக்கி
    ----

    இப்படிப் படிச்சிப் பழகிய அறச் சொற்களை எல்லாம்...
    காதல் அம்பு
    வீர அம்பு
    ஒழுக்க அம்பு
    சமூக அம்பு
    தமிழ் அம்பு
    -ன்னு பலதும் ஒன்னாக் குவித்து, அம்புறாத் தூணியில், அவங்க நாக்கில், வச்சிருக்காங்க!

    சமயம் வரும் போது, அந்தந்த அம்பு பறக்கும்!
    = அது போல இருக்கு இராகவன் அம்புறாத் தூணி!
    சமயம் வரும் போது, அந்தந்த அம்பு பறக்கப் போகுது! தூணி தூக்கினான்!

    ReplyDelete
  4. தொலைவு இலாத் தூணி

    இதுக்குப் பொருள் சொல்லணும்-ன்னா, நீங்க நிறைய ஏ.பி.நாகராஜன் படம் இல்ல ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பார்த்து இருக்கோணும்!:)

    அம்புறாத் தூணி, கட்டும் விதம்-ன்னு இருக்கு! ஒவ்வொருவருக்கும் அவங்க உசரத்துக்கு ஏற்ப மாறும்! Backpack மாதிரி இல்ல பாருங்க, அப்படியே தோள்-ல்ல போட்டுக்கறத்துக்கு! கட்டணும்!

    எடுத்துக்காட்டா, உங்க தோளில் இருக்கும் Backpackல அப்படியே கைவிட்டு, அதுக்குள்ளாற இருக்கும் புத்தகத்தை எடுக்க முடியுமா உங்களால? கஷ்டம் தான்! கழட்டித் தான் எடுக்கணும்-ல்ல?:) ஆனா இது போருக்குச் சரியா வருமா? கழட்டிக் கழட்டி எடுக்க?:))

    அதான் "தொலைவு" இலாத் தூணி!
    ரொம்பத் தொலைவும் இல்லாது, ரொம்ப நெருக்கமும் இல்லாது...
    இடக்கையில் வில் இருக்க, வலக்கை சர் சர்-ன்னு பின்னாடி போய் வரும் வாகா...
    அந்தத் "தொலைவில்", அம்பு Backpack கட்டி இருக்கணும்:) = "தொலைவு" இலாத் தூணி!

    தொலைவு = தொலைத்தல், இழப்பு-ன்னும் பொருள் கொள்ளலாம்!
    இழப்பே இல்லாத அளவுக்கு, அம்புகள் அவ்ளோ அதிகமா இருக்கு!
    மேலும் சில அம்புகள், தெய்வக் கணைகள்! அவை ஒருவர் மீதி எய்தினாலும், மீண்டும் இராகவன் கைக்கே வந்து விடும்! தொலையாது! அதான் தொலைவு இலாத் தூணி!

    அதே போல் கவிஞர்கள் எம்புட்டு பாடி முடித்து விட்டாலும், அவங்க சரக்கு குறையவே குறையாது! அவங்க நாக்கும் = தொலைவு இலாத் தூணி!
    ---

    * பல் இயல் உலகு
    * எல்லை இல் நூல்
    * நல் இயல் கவி
    * தொலைவிலாத் தூணி
    - இப்படியெல்லாம் அடுக்கவும் தொடுக்கவும் கம்பனால் மட்டுமே முடியும்! கம்பன் கவியே கவி!

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப சிக்கனமா விளக்கத்தை முடிச்சிட்டீங்களே?:)//
      வாசகர்களுக்கு இடம் விட்டு எழுதணும்னு இப்பொல்லாம் சொல்றாங்க இல்லையா :-)

      தொலைவு - '(அம்பு) தொடுக்க தொடுக்க முடியாத அம்புகளைக் கொண்ட' அப்படிங்கற பொருள் தான் 'எல்லையில் நூற்கட'லுக்குத் தோதா வருது. அதுனால 'தொலைவில் இல்லாதபடி கைக்கெட்டும்படி அருகில் உள்ள' அப்படிங்கற பொருளை எடுத்துக்கலை.

      தூக்கினான் - மிகத் துல்லியமான சொல்தேர்வு.
      ஆனா இந்த பாட்டுக்கு கொஞ்சம் முன்னாடி தான் சுக்கிரீவனும், அனுமனும் மலைகளை அல்லேக்கா தூக்கி வீசிக்கிட்டு இருக்காங்க.

      Delete
  5. ஆஹா! உங்களையெல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு! இன்னும் நன்னா தமிழ் படிச்சிருக்கலாமே-ன்னு தோன்றது! :|

    ReplyDelete
  6. and the title of this post fits in so right. Kamal Hassan's awesome too!
    'தெல்லாம் அப்டியே வர்ரத்தான்'ல? :)

    ReplyDelete
  7. நன்றி
    //தமிழ் படிச்சிருக்கலாமே-ன்னு தோன்றது//
    என்ன கெட்டுப்போச்சு, இப்போ படிங்க.
    நான் பத்தாவது வரைக்கும் தான் முறையா தமிழ் படிச்சேன். அதுக்கு மேல தன்னார்வத்துல தான் ஓடிகிட்டு இருக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director