பாலைப்புயல் '98



பாலைத்திணையதில் வாகைக்களிப்பதை பொருத்துவதில்லை நற்பாணர்
சாலைக்கடந்திட தேவைநெறிமுறை மீறுவதுண்டே சிலபொழுது
ஏழையிவனது உவகைநினைவுகள் உட்படவில்லை சட்டகத்துள்
காளையுட்புகு பீங்கான்கடையதை நினைவில் நிறுத்திய ஒரு பொழுது

மாலைசித்திரை வெயில்மணலது சூறாவளியில் சுழன்றதுபோல்
ஓராளை எதிர்கொள மஞ்சள்ளணிபவர் பத்தோடொருவரும் உழன்றாரே
வாளைவீசுடும் வேங்கையொன்றதை சொல்லிலடைப்பதும் சாத்தியமோ
ஏழையிவனது ஆசைக்கெனவோர் அரிசிப்பதத்துடன் நிறுத்திடுவேன்

ஜ்வாலைப் பார்வையை கண்ணிலிருத்தி சடுதியில் வீசிடும் காஸ்ப்ரோவிச்
பாலை எதுவோ மிதசுழற்பந்தன் எவனோ ஒருவன் போட்டதுபோல்
சேலை அணிந்திடும் மாதர் அவரது நளினம் கலந்த கொலைவெறியில்
மூலை ஒன்றதில் ஆழக்களித்திடும் மாந்தர் இடமதிற் பதித்தானே

நாளைமுதுமையில் பேரும் பாலும் உறவும் மறக்க நேர்ந்திடுமோ
ஓலைப்படுக்கையை நோக்கிடும்போது நாரணன் பேர் சொல மறந்திடுமோ
ஒரு வேளை - அதுபோல் இதுவும் ஒருநாள் மறந்திடுவேன் என பயங்கொண்டே
வாலைப்பருவ காலத்தில் கண்ட பேரழகிங்கிதை வரைந்துவைத்தேன்

Comments

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director