Posts

Showing posts from May, 2020

மிகவோர் காலம் இனியில்லை

மத்தேயு 8 21 யேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். 22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும் ” என்றார். திருவாசகம் - யாத்திரைப்பத்து நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. ⁠

மத்தம்

நற்றிணை 12 பாடியவர்: கயமனார் துறை: பாலை Vaidehi Herbert’s translation விளம்பழம் கமழும் கம்ஞ்சூல் குழிசிப்     பாசம் தின்ற தேய் கால் மத்தம்              நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்  வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்   அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்   'இவை காண்தொறும் நோவர் மாதோ ; அளியரோ அளியர்  என் ஆயத்தோர்!' என  நும்மொடு வரவு தான் அயரவும்,  தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே Wood apple fragrances in pots that are filled with curds, their noisy churning rods tied to posts and reduced by circling ropes, are the first sounds of dawn when darkness leaves. She hides her body well and removes from her feet beautiful jingling anklets, and along with her ball, so splendidly decorated with lines, places them aside. “Whenever they see these, they’ll be sad,” she thinks about her pitiful friends and tears come to her eyes beyond control, even though she desires to leave with you! The poem is 'as said

ஏனை எழுத்தென்ப

முனைவர். வினோத் ராஜன் ( அவலோகிதம் புகழ் ), யுனிகோட் ஸங்கத்தார்க்கு ஸமர்ப்பித்த விஞ்ஞாபம் கண்டோம் . இதற்கு விரோதபிப்ராயங்கள் எழுந்துள்ளனவாம். தெலுங்கு பாஷையின் ப்ரயோக லிபியில், தமிழின் ப்ரத்யேக அக்‌ஷரங்கள் இரண்டினை ஸங்கமஞ் செய்வதால், தெலுங்கின் ஆதார ஶ்ருதியே க்‌ஷீணித்துப் போகும் என்றும்; நாளை பிற பாஷைகளுக்கும் இந்த ஸ்திதி ஏற்பட்டுவிடும் என்ற அதீத ஜாக்ரதை உணர்வும் மேலிட்டிருப்பதை அறிந்தோம்.  இதுகாறும் தேவநாகரி லிபி அறியாத, எம்மைப் போன்ற தமிழர், ஸமஸ்கிருத ஶ்லோகங்களை, ஸமஸ்கிருதம் என்று நன்கறிந்து  (அது தமிழென்று சற்றும் மயங்காது) ஓரளவாவது மூல ஒலி துல்லியத்துடன் வாசிக்க இயைவது கிரந்தானுஷ்டாத்தாலே அன்றோ? என்ன ஒன்று, நம்மூரில் கிரந்தம் புழங்கியதற்கு நீண்ட நெடும் சரித்திரம் உண்டு. அதனால் ' கிரந்த அக்‌ஷரங்கள் தமிழ்தட்டச்சுப் பலகையில் இருக்கலாமா கூடாதா? ' என்பதெல்லாம் ஒரு கேள்வியே அல்ல.  சரித்திரத்தில் இருந்திருக்கிறது, அதனால் தட்டச்சு பலகையில் இருந்தாகவேண்டும். அவ்வளவு தான்.