Posts

Showing posts with the label History

ஒன்றியமும் அம்பேட்கரும்

Image
இன்றைய தேதியில் பிரபலாமன வார்த்தை: ஒன்றியம். ' மத்திய ' என்கிற சொல்லுக்கு பதில் ' நடுவண் ' என்ற மாற்றுச்சொல்லைப் பயன்படுத்தாமல் ' ஒன்றிய ' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் முன்வைக்கப்படுவது, ' மாநில உரிமை நிலைநாட்டல் ' முழக்கத் தொனி.  மேலோட்டமாக அவ்வளவுதான் என்றாலும், அதன் அடிநாதம் ' இந்தியா என்பதோர் வெற்றுக் கற்பிதம் மட்டுமே, மாநிலங்களே (மக்களே!) பௌதீக உண்மை  ' என்ற மீசார்வாக சிலம்பாட்டம்.  ' பல தேசிய இனங்களின்(!) சிறை இந்தியா ' என்கிற ரீதியில் சங்குமுழங்கின், தமிழ்கூறு நல்லுலகில் வாக்குமகசூல் சிறக்கும் என்பது சமீபத்திய மீள்கண்டடைவு.  " வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதும்! "  என்ற நேருவியத்தை பழித்து ஒதுக்கியதால் பூதாகரமாக வளர்ந்துவிட்ட  ஹிந்துத்வ எழுச்சி, இத்தகைய எதிர்வினைக்கு காரணம் என்பது உண்மை.  ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. இதற்கு அடிநாதமாக இருப்பது இந்த தேசியஇனச்சிறை சமாசாரங்களை உண்மையென்று நம்பக்கூடிய  - தாட்சண்யமாகச் சொல்வதென்றால் - அப்பாவி மனங்களின் பெரும்பெருக்கம் இச்சொல்லைப் பூரித்துப் பயன்படுத்துவோர் ' அரசியலமைப...

திராவிடப் பிதாமஹர்

சிந்தாமணியைப் பதிப்பிக்கும் பொருட்டு உ.வே.சா சென்னை வருகிறார். அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு சக்கிரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (இவர் வேறு) வந்து, அவர் நன்கு ஆய்ந்து உரை எழுதி இருப்பதை பாராட்டுகிறார் “எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம்?” என்று ஆலோசிக்கையில் அவர், “சூளை அவதானம் பாப்பையர் வீதியில் திராவிட ரத்னாகரம் என்ற பெயருள்ள அச்சுக்கூடமொன்று இருக்கிறது. அதன் சொந்தக்காரராகிய ஸ்ரீ த. கோவிந்த ஆசாரியார் என்பவர் என் நண்பர். மிகவும் யோக்கியமானவர். செட்டியாரவர்களுக்கும் தெரிந்தவர்” என்றார். “நீங்கள் சொல்வது எனக்கு நல்ல சகுனமாகத் தோற்றுகிறது; தமிழ்க் கடல் என்னும் அர்த்தத்தைத் தரும் திராவிட ரத்னாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணியைப் பதிப்பிப்பது மிகவும் பொருத்தமே. சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது? தமிழ்ச் சிந்தாமணி தமிழ்க் கடலிலிருந்து வெளிவருது நன்மையே” என்று என் சந்தோஷத்தையும் உடன்பாட்டையும் தெரிவித்துக்கொண்டேன். - என் சரித்திரம், அத்தியாயம் 95

ராமசேது

Image
சாவி'யின் 'நவகாளி யாத்திரை' (வானதி பதிப்பகம்) நூலிலிருந்து: குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி தர்மாபூருக்கு செல்வதற்குள் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்கவேண்டி இருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும்  வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்துசெல்ல மூங்கில்களினால் பாலங்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களைக் கடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன. இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஶ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை ஊன்றிக்கொண்டும், கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்கு பழக்கம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாஜியிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க அலோசனைகள் கேட்பதற்கு ஶ்ரீராம்பூருக்கு வந்திருந்தனர். காந்திஜி அப்போது மூங்கில்பாலம் மீது நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி இதைப் பார்த்துவிட்டு 'பூ! இவ்வளவு தானா...

வரலாறு அறிதலின் வரலாறு

A couple of nuggests from Dr. V.Rajesh's, Manuscripts, Memory and History: Classical Tamil Literature in Colonial India, Cambridge University Press, New Delhi, 2013     “It is scarcely possible to conceive a greater confusion than that which prevails with reference to the question of the age of Sambhanda. Mr.Taylor places Kun Pandya, and therefore Sambandha also, who converted him, about 1320 B.C., while Dr.Caldwell contends he was reigning in 1292 A.D. Thus it would appear possible to assign Sambandha to 1300 B.C. or A.D. indifferently! This is certainly curious: and I am not sure if we can find the like of it in the whole range of history. Indeed, it would seem that South Indian chronology has yet to begin its existence. We have not, in fact, as yet a single important date in the ancient history of the Dravidians ascertained and placed beyond the pale of controversy. …… A critical study of (the classical) dialect and of this literature would certainly, under ordinary ...

Nehru on non-violence

Nehru on non-violence by dagalti

Ignore a Pun at your own Hazard

Let us consider the rebus principle utilized in logo-syllabic scripts. Most signs were originally pictures denoting the objects or ideas they represented. But abstract concepts such as 'life‘ would be difficult to express pictorially. Therefore the meaning of a pictogram or ideogram was extended from the word for the depicted object to comprise all its homophones. For example, in the Sumerian script the drawing of an arrow meant 'arrow', but in addition 'life' and 'rib', because all three words were pronounced alike in the Sumerian language, namely ti. Homophony must have played a role in folklore long before it was utilized in writing. The pun between the Sumerian words ti 'rib' and ti 'life' figures in the Sumerian paradise myth, in which the rib of the sick and dying water god Enki is healed by the Mistress of Life, Nin-ti. But the Biblical myth of Eve's creation out of Adam's rib no more makes sense because the original pun has ...