Posts

Showing posts from September, 2018

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

Image
சமீபத்தில்  அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி) இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக்  கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)

Understanding

But on 81st and Central Park West I saw a pay phone. I called Woody and said, ‘Don’t worry, I’m not suicidal. I don’t regret anything, and whatever you need to do I understand.’ Those were my exact words. I knew he had a lot to handle and the last thing he needed to do was worry about me.”   I hope, dear reader, it is as obvious to you as it is to me, that this is the click.  And, more importantly, it is clear as day that  Woody would do the same. Not so much due to cheap reciprocity but due to a depth of affection for each other. One only hopes his offer doesn't need to be taken up.

ஸ்ரீஜெயந்தி

Image
இந்திரன் ஆயரைச் சீறியே மாமழை சிந்தினான் ஆங்கவர் அஞ்சவே மாமலை தன்திரு பூவிரல் ஒன்றிலே தாங்கினான் அந்தியின் மேனியான் ஆநிரைக் காவலான் சிந்தையுள் சிக்கிடா சுந்தரன் செய்ததில் விந்தையென்? பாற்கடல் தேவரும் தீயரும் முந்தைசி லுப்பவே உற்றதோர் மத்தென மந்தர மாமலை தன்னையே தாங்கிட வந்தவன் தானிவன் அம்மலை போல்பல அந்தமில் மாமலை சூழ்புவி அன்னையைத் தந்திரப் பொன்விழி யான்கொள ஏனமாய் தந்தமிட் டேந்தியே  மீட்டவன் தாமரை உந்தியின் தோன்றிய நான்முகன் தோற்றிய அந்தரம் யாவையும் தோளினில் ஏந்துமுன் தந்தைசொல் பற்றியே வீசிய தாபதன் எந்தைக்கு அரிதே இல