Posts

கவரிமாவும் மானமிலா பன்றியும்

Image
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே Varaha  @ Badami இது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் ஒரு பிரபலமான பாசுரம். பொருள் : வராஹ அவதாரத்தில் பூதேவியை காப்பாற்ற, அழுக்கான நீர்வ்வழியும் மானம் இல்லாத பன்றி உருவை எடுத்து -  திருவரங்கன், என்னிடம் முன்பு பேசிய நினைவுகளை பெயர்த்து எடுக்க முயன்றாலும் அவை பெயரா இதில் படித்ததும் துணுக்குறச் செய்யும் சொற்ற்றொடர்: மானமிலா பன்றி . என்னதான் பக்தி என்றாலும் இப்படி ஒரு அடைமொழி பயன்பாட்டை எப்படி ஏற்பது?  கோதை நாச்சியாருக்கே உரிய தனித்துவத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டாலும் சற்றே அதீதமாகத் தோன்றும். 1936ல் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில்  மானமிலா  என்பதை  ஹேயமானதொரு உருவுகொண்ட   என்று உரைக்கிறார். ஆண்டாள் தனது ப்ரபன்னரோஷத்தின் மிகுதியால்  'மானமிலாப் பன்றி' என்று செய்தேயும்...   என்று அழுத்தம் திருத்தமாக விளக்குகிறார். அதாவது, ஆண்டாள், சரணாகதி உணர்வின் மிகுதியில் அப்படி...

Suggestion of A Framework for Analyzing the Impact of NEET

Image
Usually when I seized with the opportunity to express good-faith and be a boy-scout I sit down and wait for the impulse to pass. At this age, nothing is more unseemly than optimism. Unfortunately today,  I sat in front of a keyboard. Quite counterproductive, it was. Sent off an email without as much as a spell-check. Now I have duly foisted it on you, my loyal readers (readers, அதாவது plural!) 

எட்மண்ட் பர்க்க்

Image
சமீபத்தில் தாவித்தாவி மீள்படித்துக்கொண்டிருப்பது எட்மண்ட் பர்க்கின்  ' ஃப்ரெஞ்சுப் புரட்சி பற்றி சில சிந்தனைகள் '.கன்ஸர்வேடிவ் வட்டங்களில் மூலநூலாகக் கொண்டாடப்படுவது இந்நூல். ஃப்ரெஞ்சுப் புரட்சி, ஆங்கிலகத்திலும் பரவலாகப் புளகாங்கிதப் பாராட்டுகள் பெற்றுக்கொண்டிருந்தபோது 'இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று தீர்க்கமாக சொன்னார் பர்க்க். இதனாலேயே புறக்கணிக்கப்பட்டார். எட்மண்ட் பர்க்க் சொல்லப்போனால், அறிவொளிகாலத்து 'தனிமனிதத்துவத்தை' அப்படியே ஒத்துக்கொண்ட அரசியல் சிந்தனையாளர்களுக்கு மத்தியில், அதன் ஆகர்ஷணத்துக்கு ஆட்படாத பர்க்கைத் தான் அக்காலத்து  'புரட்சிகர' எதிர்சிந்தனையாளர் என்று சொல்லலாம்.  நீங்கள் ஒரு  ' புதியன விரும்பு ' ஆசாமியாக இருந்தால், எட்மண்ட் பர்க்க் உங்களை சர்வநிச்சயமாக எரிச்சலடைய வைப்பார். பர்க்க் உங்களை 'உடைத்துப்போட்டு மீள அடுக்கச் செய்யும்' சிந்தனையாளர் அல்லர். உங்களுக்குள் அங்கும் இங்குமாக மிதக்கும், தெளிவற்ற சிந்தனைகளுக்கு சட்டகம் அளிப்பவர். ஒருவித ஏற்பு மனநிலை முன்னரே உள்ளவர்களுக்குத் தான் பர்க்க் பிடிக்கும் என்று கூட ச...

ஒன்றியமும் அம்பேட்கரும்

Image
இன்றைய தேதியில் பிரபலாமன வார்த்தை: ஒன்றியம். ' மத்திய ' என்கிற சொல்லுக்கு பதில் ' நடுவண் ' என்ற மாற்றுச்சொல்லைப் பயன்படுத்தாமல் ' ஒன்றிய ' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் முன்வைக்கப்படுவது, ' மாநில உரிமை நிலைநாட்டல் ' முழக்கத் தொனி.  மேலோட்டமாக அவ்வளவுதான் என்றாலும், அதன் அடிநாதம் ' இந்தியா என்பதோர் வெற்றுக் கற்பிதம் மட்டுமே, மாநிலங்களே (மக்களே!) பௌதீக உண்மை  ' என்ற மீசார்வாக சிலம்பாட்டம்.  ' பல தேசிய இனங்களின்(!) சிறை இந்தியா ' என்கிற ரீதியில் சங்குமுழங்கின், தமிழ்கூறு நல்லுலகில் வாக்குமகசூல் சிறக்கும் என்பது சமீபத்திய மீள்கண்டடைவு.  " வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதும்! "  என்ற நேருவியத்தை பழித்து ஒதுக்கியதால் பூதாகரமாக வளர்ந்துவிட்ட  ஹிந்துத்வ எழுச்சி, இத்தகைய எதிர்வினைக்கு காரணம் என்பது உண்மை.  ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. இதற்கு அடிநாதமாக இருப்பது இந்த தேசியஇனச்சிறை சமாசாரங்களை உண்மையென்று நம்பக்கூடிய  - தாட்சண்யமாகச் சொல்வதென்றால் - அப்பாவி மனங்களின் பெரும்பெருக்கம் இச்சொல்லைப் பூரித்துப் பயன்படுத்துவோர் ' அரசியலமைப...

உண்டு இல்லை

Image
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற கச்சிதமான இரட்டைப்புளுகு வரிகள் வழியே அறிந்ததாலோ என்னவோ நாமக்கல் கவிஞரைப் படித்ததில்லை.   அந்தப்பாடலிலேயே தமிழின் கலாசாரத் தொடர்ச்சி பேசப்பட்டிருந்தாலும் (சங்கம் முதல் பக்தி வரை), அந்த முதல் இரு வரிகள் தரும் எழுச்சி இட்டுச்செல்லும் கீழிழுக்கும் சுழல் உக்கிரமானது. அதனாலேயே ஒரு மனவிலக்கம். படித்தவரையிலும் , பிற பாடல்களும் அப்படி ஒன்றும் பிடித்தவில்லை. குழந்தைகளுக்கு தமிழ் ஓசைநயம் அறிமுகமாக எளிமையான கவிதைகள் என்பதைத் தவிர பெரிய கவிதாதிரசனம் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் சமீபத்தில் படித்ததில் பிடித்தது வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்                         நிலப்பரப்பை வேறாய் ஆண்டு வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க                         அரசமுறை வகுத்த தல்லால் ஈங்குவட இமயம்வரை இந்தியரின்                          நாகரிகம் ஒன்றே யாகும் ; தாங்கள்ஒரு...

நம்மாளு

Image
  இன்று வைகாசி அனுஷம். அதனால் ஒரு திருவள்ளுவர் இடுகை என் வருடாந்திர வழமை. இம்முறை ஒரு Recycle. ஒரு இணையநண்பரின் blogல் இட்ட commment. அதன் ஞானப்ரகாசம் குடத்திலிட்ட விளக்காய் இராமல், வருங்காலச் சந்ததிகளைச் சென்றடையும் பொருட்டு இங்கு இட்டு சாஸ்வதப்படுத்துகிறேன். /“அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று”  / போன்ற வரியை வைத்து வள்ளுவரை யாக-மறுப்பாளர் என்று நிறுவ சமணத்தரப்பு முயன்றமையை வை.மு.கோ குறிப்பிடுகிறார்(ராம்).   Quite amusing. ஒன்றை விடச் சிறந்தது மற்றொன்று என்று சொன்னால் என்ன பொருள்? உயர்ந்தது என்று கொள்ளத்தக்க ஒன்றைக் காட்டிலும் இது உயர்ந்தது என்று தானே பொருள்படும்? வள்ளுவர் சொன்னது எப்படி 'யாக மறுப்பு' என்று பொருள்படும்?  உதாரணமாக பாரதியின் வரிகளைப் பார்ப்போம்: அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்,  பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,  அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எழுத்தறிவித்தல் ௸ உயர்ந்த தர்மங்களை விட மிக உயர்ந்தது என்றல்லவா பொருள்படும்? இதிலிருந்து ‘பாரதி பிற ...

தெள்ளிய சிங்க தேவு

Image
  இன்று நரஸிம்ஹ ஜெயந்தி. இவ்வவதாரத்தின் வசீகரத்தை விளங்கிக்கொள்வதே கடினமாக இருக்கிறது. 'வசீகரம்' என்றால் காட்சி அழகைச் சொல்லவில்லை. அதை ரசிக்கும் வழிவகை அறியேன். கருத்தும், குறிப்புணர்த்துபவையும், அவை எழுப்பும் எண்ணங்களுமே அலாதியானவை. Dasavatara Cave, Ellora. Shot in 2015. விளங்கவொண்ணா முரண்களின் தொகையாக: ஹிரண்யனுக்கு கொடியவனாக, ப்ரஹலாதனுக்கு காருண்யனாக வந்தவன் - என்று பரிபாடல் முதற்கொண்டு பாடப்பட்டது நரஸிம்ஹ அவதாரம்.  ஆனால் அது ஒன்றும் இவ்வவதாரத்துக்கு மட்டுமான ப்ரத்யேக குணாதிசியம் இல்லையே. சாதுர்ய சாபங்களை முறியடிக்கும் சாகசக் கதைகள் உலகத்தில் பற்பல உண்டு.   அதிலும் தனித்துவமானது இவ்வவதாரக்கதை என்று சொல்லுவதற்கில்லை. ஆள்-அரி'யாக வந்தமை, பரிணாமக் கோட்டின் ஒரு விநோதப்புள்ளி.  அது தோற்றுவிக்கும் எண்ணம்தான் என்ன? Mythologies கவிதையில் ஏ.கே.ராமானுஜன் அவருக்கே உரிய பாணியில் எழுதிய வரி ஒரு திறவுகோல்:    A.K.Ramanujan (wiki)                            assassin  of certitudes, slay now my...