Posts

Showing posts with the label Heritage

ஒன்றன்று

Image
  அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி  உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்  கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி  உருவம் எரி கார் மேனி ஒன்று  நேரடிப் பொருள் ஹரன், நாரணன் நாமம்   ஹரணுன் நாரணனும்  முறையே அவர் நாமங்கள்  Hara and NāraNa are the respective names ஆன் விடை புள் ஊர்தி   வ்ருஷபமும், கெருடனும் முறையே அவர் வாகனங்கள் The Bull and Garuda are the respective steeds உரை நூல் மறை   ஆகமங்களும் வேதங்களும் முறையே அவர் நூல்கள் - The Agamas and Vedas are their respectively books உறையும் கோயில் வரை நீர்   கையாலயமலையும் , பாற்கடலும் முறையே அவர்கள் உறையும் ஸ்தலங்கள் The Kailāsa mountain and the milk-ocean are their respective temples (residence) கருமம் அழிப்பு அளிப்பு   அழிப்பதும், அளிப்பதும் முறையே அவர் கருமங்கள் their respective duties are to destory (at the end of aeons) and to maintain (during the aeons)  கையது வேல் நேமி   கையில் அவர்கள் முறையே ஏந்தியிருக்கும் ஆயுதங்கள் திரிசூலமும், சக்கிராயுதமும் their hands respecti...

Judex Ergo Sum

Image
Akeel Bilgrami             Akeel Bilgrami, in his recent essay  attempting to unpack Gandhi's views on caste, frames the approach as one grounded in a view of the pre-modern, pre-capitalist society as distinctly different from viewing the members of society as merely constituents of an economy. This, he argues  is the key to understanding the evolution of Gandhi's stance on caste.             This instructive essay is, in some ways, an elaboration of his  interview to Frontline in 2018 , where he mused on the tension inherent in the slogan:   Liberté, égalité and fraternité, and the points at which the Marxian and Gandhian outlook towards this tension,  overlap and distinctly depart from one another.              The crux of Gandhi's conundrum that folks across the political spectrum can relate to is what Bilgrami succinctly states thus: to retain caste ...

தமிழிலக்கியமும் தைப்பொங்கலும்

Image
 தைப்பொங்கல் ஒரு உழவர் பண்டிகை என்பது இன்று காணும் நிதர்சனம் என்றாலும், அது எக்காலத்தில் இந்நிலையை அடைந்தது என்பதில் தெளிவில்லை. ‘சங்க காலம் முதற்கொண்டே இயற்கைக்கும், மாடுகளுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவைக் கொண்டாடி வருவது தெளிவு’ என்கிற ரீதியில் ஒரு பொதுப்புரிதல் நிலவுகிறது. ஆனால் அதற்கு எந்த இலக்கிய சான்றும் இல்லை. பொதுவாக சங்ககாலம் தொட்டு தைப்பொங்கல் தமிழர் பண்டாட்டில் நிலவுவதாக நம்ப விழைபவர்கள் காட்டும் சில மேற்கோள்களைப் பார்ப்போம் (பலர் இவ்வரிகளை புளகாங்கித வாட்ஸாப் இடுகைகளில் பார்த்திருக்கலாம்!) 1. அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த  ஆய் கரும்பின் கொடிக்கூரை  சாறு கொண்ட களம் போல வேறு வேறு பொலிவு தோன்ற (புறநானூறு 22) சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் போர்ப்பாசறையைப் பாடும் பாடலில் வரும் வரி இது.  இவ்வரியின் பொருள்: உ உ “அசைந்த செந்நெல் கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பால் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை, விழா எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் போல வேறு வேறாக பொலிவு தோன்ற.... ” (உ.வே.சா உரை) இப்பாடலின் நிகழ்காலம் பொங்கல் விழா அல்ல, போர்க்களம். செந்நெல், கரும்பு இரண்...

Tamil Liturgy

There is no such thing as liturgy in Tamil, is there? We have devotional Bhakthi literature in spades. That is completely different and quite complementary.But what is exclusively Tamil archanai!? Even now, a bhattar does a nAmAvaLi based archanai in Sanskrit and then recites a pAsuram to round things off. What is being asked now is to give the devotee an option to completely excise the Sanskrit archanai and have something exclusively in  Tamil.  All this comes from an animus cultivated by - to put it charitably - strained arguments that, there existed a time when Agamic temples did not have Sanskrit incantations. Or worse, even if nothing of that sort ever existed, the time has come to expunge them.   This demand proceeds from the weak assumption that the devotee is the customer and he would wish to ‘understand’ the incantations made on his behalf. And this wish needs to be catered to. This line of argument was popularized in TN politico-cultural sphere and achieved...

ஏனை எழுத்தென்ப

முனைவர். வினோத் ராஜன் ( அவலோகிதம் புகழ் ), யுனிகோட் ஸங்கத்தார்க்கு ஸமர்ப்பித்த விஞ்ஞாபம் கண்டோம் . இதற்கு விரோதபிப்ராயங்கள் எழுந்துள்ளனவாம். தெலுங்கு பாஷையின் ப்ரயோக லிபியில், தமிழின் ப்ரத்யேக அக்‌ஷரங்கள் இரண்டினை ஸங்கமஞ் செய்வதால், தெலுங்கின் ஆதார ஶ்ருதியே க்‌ஷீணித்துப் போகும் என்றும்; நாளை பிற பாஷைகளுக்கும் இந்த ஸ்திதி ஏற்பட்டுவிடும் என்ற அதீத ஜாக்ரதை உணர்வும் மேலிட்டிருப்பதை அறிந்தோம்.  இதுகாறும் தேவநாகரி லிபி அறியாத, எம்மைப் போன்ற தமிழர், ஸமஸ்கிருத ஶ்லோகங்களை, ஸமஸ்கிருதம் என்று நன்கறிந்து  (அது தமிழென்று சற்றும் மயங்காது) ஓரளவாவது மூல ஒலி துல்லியத்துடன் வாசிக்க இயைவது கிரந்தானுஷ்டாத்தாலே அன்றோ? என்ன ஒன்று, நம்மூரில் கிரந்தம் புழங்கியதற்கு நீண்ட நெடும் சரித்திரம் உண்டு. அதனால் ' கிரந்த அக்‌ஷரங்கள் தமிழ்தட்டச்சுப் பலகையில் இருக்கலாமா கூடாதா? ' என்பதெல்லாம் ஒரு கேள்வியே அல்ல.  சரித்திரத்தில் இருந்திருக்கிறது, அதனால் தட்டச்சு பலகையில் இருந்தாகவேண்டும். அவ்வளவு தான். 

சித்திர விதிகள்

படிக்கப்படிக்க,  பொருளிலக்கணம் என்பதை the grammar of content என்பதை விட the grammar of (the aesthetics of) depiction என்று பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. (ரெண்டும் ஒண்ணுதானோ?) இவ்வாறு நோக்கினால், கறாரான விதிகளால் கட்டப்பட்ட சமூகச் சித்திரம் எழுவதாக உறுதியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவ்விதிகள் ' இப்படிப்பட்ட சித்தரிப்பே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் ' என்று  வழிகாட்டுவதாகப் பொருள்கொள்ளலாம். ஒரு சித்திரத்தின் நம்பகத்தன்மை என்பது அச்சமூகத்தின் பெருவழக்குகள் சார்ந்தே எழும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை நெகிழ்வுக்கு இடமிலா விதிகள் அல்ல - என்றே எண்ணத் தோன்றுகிறது. நம்பியகப்பொருளின் கடைசி பகுதியான ஒழிபியல் - the chapter of exceptions -  மிக சுவாரஸ்யமான பகுதி. அதுவரை நூல்நெடுக எந்த நிலத்தில் என்னென்ன பேசுபொருட்கள், விவரணைப் பொருட்கள், காதல்-மணம்-இல்வாழ்க்கை என்று ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு கவித்தருணங்கள் வடிக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு அவற்றிற்கு விதிவிலக்குகள் சொல்லப்படுகின்றன.

கல் தோன்றிய காலம்

Image
அகலிகை எப்போது கல்லானாள்? புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம் பரிபாடல் 19ல்   திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது 50-52 வரிகள்: ... இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும் இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும்  சுட்டு அறிவுறுத்தவும் கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள். பரிபாடல் காலத் தமிழகத்தில்  referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும். சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே  தெரிந்தது தானே? ஆம். ஆனால் எந்த ராமாயணம்?

சிவராத்திரி

Image
துடியிடை மடமகள் சரிபாதி உடலினில் இடந்தரு பதியோனே விடமதை மிடறினில் அமுதாக திடமுற குடித்திடு மறையோனே படபட துடியொலி தனைபேணி வடிவுறு நடமிடு தழலோனே கொடியவர் நெடுமதில் அவைமூன்றும் பொடியென கெடமுறு வலித்தோனே அடவியின் கடகரி உரித்தோனே விடையமர் கொடைவள பிறவானே சுடுவிழி மடமதன் எரித்தோனே நெடுபுனல் சடையினில் வரித்தோனே வடவரை உடையவ எனபோதும் சுடலையில் குடியுள பெருமானே முடிமதி சுடரொளி தனைவீச கடிமலர் அடியினை அருளாயே             பா வகை: பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Pic courtesy: Link

பீஷ்மாஷ்டமி

Image

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

Image
சமீபத்தில்  அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி) இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக்  கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)

மராமரம்

Image
தூண்சிற்பம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் மராமரமப் படலம் வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,      தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று      உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த      பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து      கீழ் போகிய வேர; பொருள்: (பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை. வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை: கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம் Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the e...

ஆரினிக்கடைவர்

காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர் வித்துக்கொரு முத்திக் குருநபி       எனவோதி மத்திட்டுவ லித்துச் சிறுபுலி கர்ச்சித்துமு ழக்கிக் குளறிட மத்திட்டுடை பட்டுப்  புடைபெயர் தயிரேபோல் மக்கட்குறு  துக்கப் படலையொ துக்கித்திகழ் சொற்கத்    தையுமுரி மைக்கத்தொடு கற்பித் தருள்வது வொருநாளே

மாசு

பாசிதூர்ந்து கிடக்கும் பார்மகட்கு பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் நீர்வார மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே நாச்சியார் திருமொழி 11:8 Who can guess what all He spoke* To Dame Earth as he lifted Her From the mossy depths Whilst He was a Shameless Soggy Swine That Resplendent Lord of Srirangam * what all he spoke

ராமாவதாரம்

Image
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத் தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ் தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய். ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. (பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்) நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) அப்போது  அந்த  வேள்வித்  தீயிலிருந்து தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது புள்ளமங்கை போலவே,  அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது. வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!),  எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?).. இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க: இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்...

கம்பராமாயணம் கருடத் துதி - வேதமும் கீதையும்

உரையில் குறிப்பிடப்படும் பாடல்கள்:

கல்லில் உறைந்த கணம்

Image
கீழே உள்ளது புள்ளமங்கை பிரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எடுத்த படம். பராந்தகன் I காலத்துக் கோவில்(லாம்). Miniature சிற்பங்களுக்காக பிரசித்தம். ராமாயணக் கதை சங்ககாலம் தொட்டே தமிழ்நாட்டில் அறியப்பட்டதுதான் என்றாலும், ஏனோ ராமாயணச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் இல்லை. கைலாயமலையை உலுக்கும் ராவணன் சிற்பங்கள் கூட உண்டு: காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அலறும் ராவணன் (பெயர்க்காரணச்சிற்பம்?). ஆனால் ராமாயணக் காட்சிகள் இல்லை! புள்ளமங்கையில் காணக்கிடைப்பவையே முதல் ராமாயணச் சிற்பங்கள். அங்கே பார்த்த பற்பலவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்த பலவற்றில் ஒன்று இது.