Posts

arundhavappanRi

Just Finished Reading Bharathi Krishnakumar 's arunthavappanRi (அருந்தவப்பன்றி). A very interesting book about a phase in Bharathi's life which has not been talked about much - either by his biographers or by himself. A phase of about six years - teens to early twenties and later a four month period- when he says poetry abandoned him.

One Situation - Two Poets

Kamban's RavaNan castigating VibeeshaNan and Bharathi's Duryodhanan castigating Vidhuran.

Make Love Not Work

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றோ? யான் எதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர் என் மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா; ஊன் உடலை வருத்தாதீர்; உணவு இயற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்! Happy Birthday!

Personal Post

"He is.." In my opinion, there is no way to finish this sentence truthfully. Any way to finish that sentence is a rather impolite approximation that we make do with.

நிகழ் - பா.வெங்கடேசன்

பொதுவாக எனக்கு புதுக்கவிதைகள் பிடிப்பதில்லை. அதனால் படிப்பதில்லை. அதனால் தான் - ஐம்பது வயது கடந்துவிட்ட பின்பும் -புது என்ற (என் புரிதலில்) perjorativeஆன முன்னொட்டைப் பிடிவாதமாக பயன்படுத்துகிறேன். புதுக்கவிதை எழுதும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்தவர் புதுக்கவிதைகளை படிக்கும் மனநிலையைக் கொஞ்சம் கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை.

விசிஷ்டாத்வைதம்யாங்களே

அப்படின்னா என்ன? படித்ததில் பிடித்த ஒரு விளக்கம் இது: ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல். "தத்துவ ஆழங்களுக்கெல்லாம் செல்லும் அளவிற்கு தெம்பு இல்லை, எது எது எது எது என்று சுருங்கக் கூறுங்களேன்'" என்று மேலோட்ட ஆர்வம் உள்ள பலர் உளர்/ளோம்.

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்

"கம்பன் கிணறே பாதி தான் தாண்டிருக்கேன். இன்னும் வால்மீகி வேற படிக்கவேண்டியிருக்கும் போல இருக்கே. எங்கே, எப்பொ படிக்க போறேன்?" என்றெல்லாம் கவலைப்படவைத்துவிட்டது இன்று நான் படித்த இப்பாடல். சீதையைப் பிரிந்த ராமன் சொல்வது: ந மே துக்கம் ப்ரியாதூரே ந மே துக்கம் ஹ்ருதேதிவா ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்ததே என் பிரியத்துக்குரிய சீதை எங்கோ தொலைவில் இருக்கிறாள் என்பதில்லை என் துக்கம் அவளை யாரோ தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்பதில்லை என் துக்கம் (அவனை வெல்வது எனக்குப் பெரிய விஷயமல்ல) நான் நினைத்து நினைத்து கவலைப்படுவது இதைப்பற்றி தான்: " நாளுக்கு நாள் அவளுக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறதே " I worry not that my beloved is afar I worry not that she was taken away I worry from now till I win the war She will be aging each passing day