Posts

Death of the Author

சிறுகதை ஆகியிருக்கவேண்டிய சிந்தனைத் தெறிப்பை ' அப்படியே சாப்பிடுங்கள் ' என்று தருகிறேன். எனது சோம்பல் தமிழ் வாசக உலகின் நல்லூழ். --------------------------------------------------------------------------------- தமிழ்போர்னோவின் அவல நிலை பார்த்து, நிவர்த்தி செய்ய ஒரு நற்றொடர் எழுதத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். மானங்காக்க புனைப்பெயர் தரித்தெழுதுகிறான். உயர்சரக்குக்குத் தகுந்த சிலாகிப்பு கிட்டுகிறது.தன் புனைப்பெயர் மீதே பொறாமைப்படுகிறான். அதே நேரத்தில் திரைவிலக்கவும் தயக்கம் - ஏனென்றால் அவனது பேசுபொருள் அப்படி - ஏற்கனவே வாசகர்கள் மத்தியில் அவனுடைய க்ரியா ஊற்றைப் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது. அந்த genreக்கே உரித்தான incredulousness, fantasyத்தன்மையை தவிர்த்து ஒரு authenticyஐ அவன் கொண்டு வருவது தான் அவனது appealஆக இருக்கிறது. 'இத்தனை authenticity கற்பனையால் சாத்தியம் இல்லை' என்று வாசகர்கள் நினைக்கிறார்கள். " Either he lives a life of unbridled experiences or possesses an imagination fueled by unreal levels of perversion. Either case, his is so good that his pers...

Thoughts Sparked by Mahanagar

Image
Saw Mahanagar last night. What a terrific film! With each Satyajit Ray film I watch I have this growing satisfaction that this is a filmmaker I 'get' - finally. So permit me a ramble before I get to the film Film Medium I have a distant relationship with the medium of film, which IMO is fraught with risks of miscommunication when attempting themes which are 'far out'. I expect a film to acknowledge a natural limitedness in scope and choose modest subjects becoming of it and execute them to perfection. Themes where at no time the viewer - that is me - is struggling to grapple with the 'core' - so to speak.

கம்பன் கவிச்சக்கரவர்த்தியா?

சந்த ஒலியில் கட்டுக்குள்ளேயே உழன்றுகொண்டு, மிகையான உவமைகளை மீண்டும் மீண்டும் கையாண்டு, புளித்துப்போகும் அளவிற்கு பெண்ணுடல் பற்றிய வருணணைகளை எழுதியவர் தான் கம்பர், என்பதை மறுக்கமுடியாது. பக்திரசம் என்பதிலாவது அவர் முன் நிற்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு சில நூறு ஆண்டுகள் முன்னர் எழுதிய ஆழ்வார்களின் பாசுரங்களோடு ஒப்பிட்டால் கம்பர் எழுதியவை வெற்றுக்கூவல்கள் என்றே தோன்றுகின்றன. மேலும் சோழர்கள் படைபலம், போர்த்திறம் ஆகியவற்றை மறைமுகமாக மெச்சும் வகையில் யுத்த பகுதிகளை அளவுக்கு அதிகமாக நீட்டி காவியத்தின் சமன்நிலை இலக்கணங்களை முற்றிலும் குலைத்தார் கம்பர்.

ரோஜா ராஜா

Why couldn't a girl be queenly, and give the gift of herself - DH Lawrence (Lady Chatterley's Lover) ராணியை ராணியாகவே வைத்துக்கொண்டு ரசிக்க, ராஜா வேண்டுமே. என் இசை ரசனை கொஞ்சம் மட்டு என்று பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன். இதைக் கேட்டுக் கேட்டு எரிச்சலடைந்த நண்பர்கள் தவிற, புதுஅறிமுகமாக கிடைக்கும் (சிக்கும்?) meesicalகள் 'இசையை ரசிக்க இரு காதுகள் இருப்பதே போதுமான தகுதி' என்பது போன்ற தாட்சண்யமான வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.'படிப்பதற்கு இரு கண்கள் போதும்' என்று யாரையாவது நான் மனமாற சொல்லமுடிந்தால்தான் பிரபஞ்சம் சமநிலை எய்தும்.

Appreciation, Criticism and the Artist

(an) ordinary emotional person, experiencing a work of art, has a mixed critical and creative reaction. It is made up of comment and opinion, and also new emotions which are vaguely applied to his own life. The sentimental person, in whom a work of art arouses all sorts of emotions which have nothing to do with that work of art whatever, but are accidents of personal association, is an incomplete artist. For in an artist these suggestions made by a work of art, which are purely personal, become fused with a multitude of other suggestions from multitudinous experience, and result in the production of a new object which is no longer purely personal, because it is a work of art itself.

Reading on anyway

Since here விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் - பி.ராமமூர்த்தி சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - உவேசா Lighen up George- Art Buchwald Master and Margerita - Mikhail Bulgakov இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்- ஜெயமோகன் திசைகாட்டிப் பறவை - பேயோன் ஞானக்கூத்தன் கவிதைகள் Pratidwandi - Sunil Gangopadhyay Our Films their films - Satyajit Ray Darjeeling (heh heh)- Satyajit Ray Cat's Cradle - Kurt Vonnegut The Laughing Policeman - Sjöwall and Wahlöö Chronicle of a Death Foretold - Gabriel Garcia Marquez An Autobiography - Jawaharlal Nehru கம்பராமாயணம் - சுந்தர காண்டம் வரலாறும் வழக்காறும் - ஏ. சிவசுப்ரமணியன் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வரலாறு - நாஞ்சில் நாடன் அந்தக்காலத்தில் காப்பி இல்லை - ஆ.இரா. வெங்கடாசலபதி A short introduction to Art History - Dana Arnold பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் கம்பன் தொட்டதெல்லாம் பொன் - கமல...

சொதப்பற்றமிழ்

Image
நேற்று ரயில்பயணத்தில் தீராநதி, விகடன், நக்கீரன் - வாங்கிப்படித்தேன். மூன்றுமே வெவ்வேறு வகையில் படிக்கமுடியாதபடி இருந்தன. சராசரி இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளின் உரைநடை தரத்தைக் கூட எட்டமுடியாதபடி தமிழ்ப்பத்திரிகைகள் இருக்கின்றன. 'கட்டுரைகள் சகிக்கமுடியாதபடி மேலோட்டமாக இருக்கின்றன' என்பது என் மேலோட்டமான அபிப்ராயம். "சராசரி வாசகர்..." என்று ஆரம்பிக்கும் சொற்றொடர்களில் எதிர்வாதம் தொடங்கும் என்பதால், நக்கீரன், விகடனை விட்டுவிட்டு, சற்றே high-brow வாசகர்களுக்கான தீராநதிக்கு வருகிறேன். நவீனத்துவம்: மேற்கும் கிழக்கும் என்று ஒரு தொடர். மோனிகா என்பவர் எழுதுகிறார். ஓவியம் பற்றிய தொடரா, இல்லை எல்லா கலைகளைப் பற்றியும் எழுதி வருகிறாரா என்று தெரியவில்லை. ஆகஸ்ட் இதழில் அத்தொடரின் எட்டாம் அத்தியாயம் வந்திருந்தது: ஓவியர் எப்.என்.சூசா பற்றி எழுதியிருக்கிறார்.